ADDED : செப் 11, 2016 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நிந்தனைக்காரனைக் கண்டிக்காதே. அவன் உன்னைப் பகைப்பான். அறிவுள்ளவனை கண்டித்தாலும் உன்னை நேசிப்பான்.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்குக் கருணை கிடைக்கும்.
* நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.
* இளம் பெண்கள் மன அடக்கம் பெறவும், தங்கள் கணவர்களைக் காதலிக்கவும், குழந்தைகளை நேசிக்கவும் கற்பிக்கப்படட்டும்.
* கற்புள்ள பெண்மணி புருஷனுக்குக் கிரீடம்! ஆனால், அவமானத்தை உண்டாக்குபவள் அவனுக்கு எலும்புருக்கி போல.
* ஒவ்வொருவனும் காதுகொடுத்துக் கேட்பதில் துரிதமாகவும், பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்பானாக.
* உன்னுடைய கண் உன் உடலின் தீபமாயிருக்கிறது.
- பைபிள் பொன்மொழிகள்